8 8
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம்

Share

விடுதலை புலிகள் மீதான தடை : இந்திய அரசின் முடிவை உறுதி செய்தது தீர்ப்பாயம்

இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதால், விடுதலை புலிகள் அமைப்புக்கான தடையை நீடிக்கும் இந்திய மத்திய அரசின் முடிவை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019ல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இதற்கிடையே, இந்த அமைப்புக்கு தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

இந்த தீர்ப்பாயமானது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதில் ஆட்சேபனை இருப்பவர்கள் அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கலாம் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ(vaiko) உள்ளிட்ட பலர், புலிகள் அமைப்பு மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தீர்ப்பாயத்தை அணுகினர்.

மத்திய உள்துறை அமைச்சகம், தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘புலிகள் அமைப்பினர் தனிநாடு கோரிக்கையை இன்னும் கைவிடாமல், தலைமறைவாக செயல்பட்டு வருகின்றனர். நிதி திரட்டுதல் மற்றும் தனிநாடு குறித்த பிரசார நடவடிக்கைகளை அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

‘வெளிநாடுகளில் வாழும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்’ என, தெரிவித்திருந்தது.

இதையடுத்து, புலிகள் அமைப்பின் மீதான ஐந்தாண்டு கால தடையை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘புலிகள் அமைப்பின் நோக்கம், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை செல்லும்’ என, தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...