13
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம்

Share

பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம்

பாதுகாப்புத்துறை சார் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையில் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு அமையவே பாதுகாப்புப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அண்மையில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாத்திற்கு முன்னதாக தங்களது பதவிக் காலம் முடிவடையும் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகளின் பதவிக் காலம் இவ்வாறு நீடிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் நாட்டின் பாதுகாப்பு திட்டம் அதேவிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...