13
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம்

Share

பாதுகாப்பு உயர் பதவிகளை வகிப்போர் குறித்து ஜனாதிபதி தீர்மானம்

பாதுகாப்புத்துறை சார் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையில் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு அமையவே பாதுகாப்புப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அண்மையில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாத்திற்கு முன்னதாக தங்களது பதவிக் காலம் முடிவடையும் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகளின் பதவிக் காலம் இவ்வாறு நீடிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் நாட்டின் பாதுகாப்பு திட்டம் அதேவிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...