4 5
இலங்கைசெய்திகள்

இரத்து செய்யப்படும் விடுமுறை கொடுப்பனவு: ஜனாதிபதியை நாடும் முக்கிய தரப்பு

Share

இரத்து செய்யப்படும் விடுமுறை கொடுப்பனவு: ஜனாதிபதியை நாடும் முக்கிய தரப்பு

விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்யும் முடிவை மாற்றுமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்க நாடாளுமன்ற ஊழியர்கள் தயாராகி வருகின்றதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி அடுத்தவாரம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளமையினால் அப்போது இந்த கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அரச சேவையில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடுமுறை கொடுப்பனவு நீண்ட காலமாக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், விடுப்பு கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டதால், நாடாளுமன்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...