15 15
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Share

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து பல கேள்விகள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்பின், மூன்று கேள்விகள் மாத்திரமேவெளியாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான மதிப்பெண்களை இலவசமாக வழங்க பரீட்சை திணைக்களம் முடிவு செய்திருந்தது.

இதனையடுத்து மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி நேற்றுமுன் தினம் (15) உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 54 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளை இரத்து செய்து மீண்டும் பரீட்சையை நடத்த உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...