26 9
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல்

Share

தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 14ஆம் திகதி பெயர் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.

குறித்த கடிதத்தில், மதவாச்சி மற்றும் கெபிதிகொல்லாவ பிரதேச சபைகள் தொடர்பாக, மேலும் அரசியல் நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதிகாரத்தைப் பெற முயற்சிக்கவோ வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், இரண்டு உள்ளூராட்சி மன்றங்களும் ஏற்கனவே நிறுவப்பட்டதாகவும் மேற்கொண்டு முயற்சித்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதம் முத்திரை இன்றி வந்துள்ளது. எனவே, தபால் அதிகாரி ஒருவரின் உதவி இன்றி இதனை செய்திருக்க முடியாது.

இது தொடர்பில் நான் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். கடந்த காலங்களில், குறிப்பாக எங்களின் சிறுவயது பராயத்தில் இவ்வாறான மிரட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...