யாழ்ப்பாணம், சங்குவேலியில் மாமரத்தில் ஏறி கிளை வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கிளை வெட்டும்போது அவர் நின்ற கொப்பு முறிந்ததால் தவறி வீழ்ந்துள்ளார்.
கீழே வீழ்ந்து சுயநினைவற்றுக் காணப்பட்ட அவரை, யாழ். போதனா மருத்துவமனையில் சேர்த்தபோதும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.
#SriLankaNews
Leave a comment