சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய
இலங்கைசெய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய

Share

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய

முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் அவுஸ்திரேலியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வழக்கினை ஆராய்ந்த சிட்னி நீதிமன்றம் பிணை நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அவர் மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...