1 18
இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள்

Share

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள்

கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்திலிருந்து நேற்றும் இரும்பு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த பகுதி மக்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள் | Danger Bullying In Colombo Krrish Tower

நேற்று பிற்பகலும் கிரிஷ் கட்டடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த இரும்பு மூடியின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

குறித்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் இன்று நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, காரொன்றின் மீது இரும்புப் பகுதி ஒன்று வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், கடந்த 7ஆம் திகதி, யார்க் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, மற்றொரு பகுதி இடிந்து விழுந்து, கடந்த 8ஆம் திகதி இரவு, அந்த இடத்தில் இருந்து அலுவலக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் சென்ற போது, இரும்பு பகுதி இடிந்து விழுந்தது.

இவ்வாறான நிலையில் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...