1 18
இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள்

Share

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள்

கொழும்பு கோட்டையிலுள்ள கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற தன்மை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்திலிருந்து நேற்றும் இரும்பு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த பகுதி மக்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடம் – உயிர் அச்சத்தில் மக்கள் | Danger Bullying In Colombo Krrish Tower

நேற்று பிற்பகலும் கிரிஷ் கட்டடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த இரும்பு மூடியின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

குறித்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் இன்று நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, காரொன்றின் மீது இரும்புப் பகுதி ஒன்று வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், கடந்த 7ஆம் திகதி, யார்க் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, மற்றொரு பகுதி இடிந்து விழுந்து, கடந்த 8ஆம் திகதி இரவு, அந்த இடத்தில் இருந்து அலுவலக பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் சென்ற போது, இரும்பு பகுதி இடிந்து விழுந்தது.

இவ்வாறான நிலையில் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...