இலங்கைசெய்திகள்

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

Share
14 5
Share

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டேன் பிரியசாத்தின் படுகொலைக்குக் காரணமாக துப்பாக்கிதாரி மதுபான விருந்தொன்றில் கலந்து கொண்டு கொழும்பு, குருந்துவத்தை ஊடாக பயணிக்கவிருந்த தகவல் மேல்மாகாண குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

அதனையடுத்து அப்பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்ட பொலிசார், டேன் பிரியசாத் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஹட் பந்து என்பவர் பயணித்த காரையும் நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது பொலிஸாருடன் வாய்த்தர்க்கம் புரிந்து பந்து, பலவந்தமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மதுபோதையில் அவர் செலுத்திய வாகனம் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பயணித்த வாகனத்தில் மோதுண்டதை அடுத்து, குருந்துவத்தைப் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

எனினும் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் மீது முறைப்பாடு பதிந்துவிட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர். அதன் பிரகாரம் இரண்டாவது தடவையாகவும் அவர் பொலிசாரிடம் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அவ்விடத்துக்கு வருகை தந்த மிரிஹானை குற்றத் தடுப்புப் பிரிவினரே ஹட்பந்துவை இனம் கண்டு, டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
12 5
இலங்கைசெய்திகள்

வாக்களிக்க தகுதியுள்ள மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இலங்கையில் நாளை(6) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிக்க...

15 5
இலங்கைசெய்திகள்

இலங்கை வழிக்கு வராவிட்டால் வரிச் சலுகையை விலக்குங்கள்! தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்து

ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும்...

13 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,...

11 5
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதான வீதியில் வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை...