FB IMG 1655223523141
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெருகலில் கடும் காற்றால் 38 வீடுகள் பகுதியளவில் சேதம்!

Share
திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில் வீசிய காற்றால் 38 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உப்பூரல் பிரதேசத்தில் பலத்த மழையுடன் வீசிய காற்றால் மேற்படி வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மீனவர்களின் வள்ளங்கள் சிலவும் உடைந்துள்ளன.
இதேவேளை, மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழையால் ஏற்பட்ட சேத விபரங்களை வெருகல் பிரதேச செயலகம் ஊடாகத் திரட்டி வருவதாகவும், இதுவரைக்கும் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.
அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்து தகவல்களைப் பெற்று மாவட்ட அரச அதிபரின் ஆலோசனையின் பேரில் வெருகல் பிரதேச செயலாளரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...