6 15
இலங்கைசெய்திகள்

இலங்கையை நெருங்கும் புயல்! நாட்டுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடல் பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதியிலும் மாலத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் தற்போது பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக காற்று வரைபடம் மற்றும், வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில்(windy) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மழை வீழ்ச்சி நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு அடுத்த சில நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் (மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு) பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பிற்பகல் நாளை பி.ப 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...