yh 5 scaled
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

Share

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

மியன்மாரில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்பதற்கு பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக்க பண்டார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் சைபர் குற்ற வலயம் என அடையாளப்படுத்தப்படும் பகுதியில் சிக்கிய இந்த 56 இலங்கை இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மியன்மாரின் உள்விகார அமைச்சர் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மியான்மார் மற்றும் தாய்லாந்து எல்லை பகுதியில் இந்த சைபர் கிரிமினல் ஏரியா அல்லது சைபர் குற்ற வலயத்தில் இலங்கையைச் சேர்ந்த 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலயம் முழுமையாக பயங்கரவாதிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதனால் இளைஞர்களை விடுதலை செய்வதில் பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இலங்கையர்களை மீட்பது தொடர்பில் மியன்மார் இராணுவ ஆட்சியின் அதிகாரிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மட்டுமின்றி ஆசிய நாடுகள் பலவற்றின் இளைஞர், யுதிகள் இந்த வலயத்தில் அடிமைச் சேவகம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டு இருந்தவர்களை சில நாடுகள் இராணுவ ரீதியான நடவடிக்கைகள் மூலம் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு காலப்பகுதியில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை இளைஞர், யுவதிகளை தாய்லாந்துக்கு அழைத்துச் சென்று அவர்களை தீவிரவாதிகளிடம் பெரும் தொகை பணத்திற்கு விற்பனை செய்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...