Untitled 1 Recovered Recovered
இலங்கைசெய்திகள்

கொட்டகலை பிரதேச சபை இ.தொ.கா வசம்

Share

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜேசுதாசன் வியாகுலமேரி சபையின் உப தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராஜமணி பிரசாத், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லெட்சுமன் விஷ்வநாதன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டதால், திறந்த வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் தனக்கு முன் அழைக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமன் விஷ்வநாதன் உட்பட நான்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

சபையில் 12 உறுப்பினர்களும், வலுவான கோரமும் இருந்ததால், பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 10 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து, ஆணையாளர் வெளிப்படையாக வாக்கெடுப்பை நடத்தினார்.

திறந்த வாக்கெடுப்பில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ராஜாமணி பிரசாந்த், 10 வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டு சுயாதீன உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....