மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவிக்கையில்,
நாட்டுக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், உறுதியளித்துள்ளது.
எனவே நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார சபைக்கு தொடர்ந்து டீசல் விநியோகம் கிடைத்தால், விரைவில் மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும் – என்றார்.
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ், 40,000 மெட்ரிக் டொன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இன்று மாலை இந்த டீசலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews