அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Share

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த சிடி ஸ்கேனர் இயந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தகவலை அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் மொத்தம் 44 சிடி ஸ்கேன் இயந்திரங்கள் காணப்படுகின்றன.

அதன்படி, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 12 சிடி ஸ்கேன் இயந்திரங்களும், ஏனையவை குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரணை, தேசிய பல் வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன.

இதில் சில இயந்திரங்கள் பல மாதங்களாக செயல்படவில்லை எனவும் மொத்தத்தில், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத ஏழை மக்களே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார அமைச்சுக்கு போதிய நிதி வழங்கப்படாததால் இந்த இயந்திரங்களை புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...