அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
இலங்கைசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Share

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த சிடி ஸ்கேனர் இயந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த தகவலை அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் அரச மருத்துவமனைகளில் மொத்தம் 44 சிடி ஸ்கேன் இயந்திரங்கள் காணப்படுகின்றன.

அதன்படி, கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 12 சிடி ஸ்கேன் இயந்திரங்களும், ஏனையவை குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரணை, தேசிய பல் வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றன.

இதில் சில இயந்திரங்கள் பல மாதங்களாக செயல்படவில்லை எனவும் மொத்தத்தில், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத ஏழை மக்களே இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு வருடங்களாக சுகாதார அமைச்சுக்கு போதிய நிதி வழங்கப்படாததால் இந்த இயந்திரங்களை புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...