3 1 10
இலங்கைசெய்திகள்

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்… அச்சத்தில் மக்கள்!

Share

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்… அச்சத்தில் மக்கள்!

அம்பாறை (Ampara) மாவட்டம் – காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த முதலைகள் இன்று (25) இறந்து கரையொதுங்கியமை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் அண்மைக்காலமாக பல முதலைகள் காணப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30ற்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது அங்கு பெய்துவரும் அடைமழை காரணமாக சுமார் 7 அடி முதல் 9 அடி வரையான முதலைகள் இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...