28 1
இலங்கைசெய்திகள்

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

Share

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் (Ali Sabry) அறிக்கை ஒன்று தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த் தலைமை தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்து வருவதோடு பொதுவான இலங்கை அடையாளத்தின் பாகமாக இருக்க மறுக்கிறது என்று அலி சப்ரி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சப்ரியின் அறிக்கை, சிங்கள பெரும்பான்மையினருடன் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்கு செல்ல முயலும் தமிழர்களின் நீண்ட அரசியல் வரலாற்றைத் தவிர்த்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

ஜி.ஜி பொன்னம்பலத்தின் 50:50 முன்மொழிவு. 1957 பண்டாரநாயக்க-செல்வநாயகம் மற்றும் 1965 டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற அடுத்தடுத்த முன்மொழிவுகள் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் துண்டிக்கப்பட்ட மற்றும் நீடித்த எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் கைவிடப்பட்டன.

2009இல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 1,69,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,

இந்தநிலையில் 2010 தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்தும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

இதில் 2010ல் பொன்சேகாவையும், 2015ல் மைத்திரிபால சிறிசேனவையும், 2019ல் சஜித் பிரேமதாசவையும் ஆதரிப்பதும் உள்ளடங்கும் என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்படி தொடர்ந்து ஆதரவளித்த போதிலும், 13வது திருத்தத்தின் கீழ் இராணுவமயமாக்கல், பொறுப்புக்கூறல் அல்லது அதிகாரப் பகிர்வில் தமிழர் தாயகம் குறையவில்லை என்றும் குறித்த சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...