28 1
இலங்கைசெய்திகள்

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

Share

அலி சப்ரியின் கருத்துக்களுடன் உடன்பட மறுத்து வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் (Ali Sabry) அறிக்கை ஒன்று தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த் தலைமை தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்து வருவதோடு பொதுவான இலங்கை அடையாளத்தின் பாகமாக இருக்க மறுக்கிறது என்று அலி சப்ரி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சப்ரியின் அறிக்கை, சிங்கள பெரும்பான்மையினருடன் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்கு செல்ல முயலும் தமிழர்களின் நீண்ட அரசியல் வரலாற்றைத் தவிர்த்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

ஜி.ஜி பொன்னம்பலத்தின் 50:50 முன்மொழிவு. 1957 பண்டாரநாயக்க-செல்வநாயகம் மற்றும் 1965 டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் போன்ற அடுத்தடுத்த முன்மொழிவுகள் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் துண்டிக்கப்பட்ட மற்றும் நீடித்த எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் கைவிடப்பட்டன.

2009இல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 1,69,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்,

இந்தநிலையில் 2010 தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்தும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

இதில் 2010ல் பொன்சேகாவையும், 2015ல் மைத்திரிபால சிறிசேனவையும், 2019ல் சஜித் பிரேமதாசவையும் ஆதரிப்பதும் உள்ளடங்கும் என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்படி தொடர்ந்து ஆதரவளித்த போதிலும், 13வது திருத்தத்தின் கீழ் இராணுவமயமாக்கல், பொறுப்புக்கூறல் அல்லது அதிகாரப் பகிர்வில் தமிழர் தாயகம் குறையவில்லை என்றும் குறித்த சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...