rtjy 123 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்

Share

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்

இலங்கையில் கோவிட் புதிய திரிபினை கண்டறிவதற்கு தேவையான போதிய வசதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் ஜே.என்.1 இலங்கைக்குள் பரவியிருக்கலாம் என சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பிலான பரிசோதனைகளை நடாத்தக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பணியாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கோவிட் பரிசோதனை நடத்தக்கூடிய ரெபிட் என்டிஜன் உபகரணங்கள் மருத்துவ விநியோகப் பிரிவின் கையிருப்பில் உள்ள போதிலும், அவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் புதிய கோவிட் திரிபு பரவி வரும் நிலையில், இலங்கையில் இந்த திரிபு கிடையாது என உறுதிபடுத்தி எவராலும் கூற முடியாது எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கோவிட் திரிபினால் சில நாடுகளில் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கை சுகாதாரத் துறையினர் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை நடத்தி உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயக்கம் காட்டி வருவதாகவும் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...