rtjy 123 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்

Share

புதிய கோவிட் திரிபின் தகவல்களை வெளியிட சுகாதார அமைச்சு தயக்கம்

இலங்கையில் கோவிட் புதிய திரிபினை கண்டறிவதற்கு தேவையான போதிய வசதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் ஜே.என்.1 இலங்கைக்குள் பரவியிருக்கலாம் என சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பிலான பரிசோதனைகளை நடாத்தக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பணியாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கோவிட் பரிசோதனை நடத்தக்கூடிய ரெபிட் என்டிஜன் உபகரணங்கள் மருத்துவ விநியோகப் பிரிவின் கையிருப்பில் உள்ள போதிலும், அவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் புதிய கோவிட் திரிபு பரவி வரும் நிலையில், இலங்கையில் இந்த திரிபு கிடையாது என உறுதிபடுத்தி எவராலும் கூற முடியாது எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கோவிட் திரிபினால் சில நாடுகளில் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கை சுகாதாரத் துறையினர் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கினை பின்பற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை நடத்தி உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயக்கம் காட்டி வருவதாகவும் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....