கடந்த வாரம் முதல் அநுராதபுரம் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் பதிவானது அதிகரித்து வருகின்றது என சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவ்ககப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் மாத்திரம் அநுராதபுரம் மாவட்டத்தில் 650 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
மேலும் அங்குள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#srilanka