கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிய கோவிட் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அந்த 24 மணி நேரத்தில் 05 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 4026 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி, கேரளா இப்போது கோவிட் தொற்றின் புதிய திரிபில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல், இந்தியாவில் 37 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக மே 22 அன்று, இந்தியாவில் 257 கோவிட் தொற்றுள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், மே 31 அன்று, இந்த எண்ணிக்கை 3,395 ஆகவும், பின்னர் 4,026எண்ணிக்கையாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.