ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்திலேயே சபை புறக்கணிப்பு !- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

6ace78af56fe1c334e4b34e5f32299b2 XL

வீடமைப்பு அமைச்சு பதவியை வகித்த சஜித் பிரேமதாச செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

 

இன்று இடம்பெற்ற பாரளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதான எதிர்கட்சி குறித்த அமர்வை புறக்கணித்ததற்காகவே ஆளுங்கட்சி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இது தொடர்பில் உரையாற்ரியுள்ளார்.

 

மேலும், எதிரணியின் செயற்பாடு மோசமாக உள்ளது. சபாநாயகரைக்கூட தாக்குவதற்கு முற்படுகின்றனர். நீங்கள் ஜனநாயகத் தலைவராக இருக்கின்றீர்கள். எதிரணிக்கு அதிக வாய்ப்பை வழங்குகின்றீர்கள். எனவே, உங்கள்மீது கை வைப்பதற்கு எவருக்கும் நாம் இடமளிக்கமாட்டோம்.

 

எதிரணியனர் ஊடக பிரச்சாரத்துக்காகவும், சர்வதேசத்துக்காகவுமே சபை புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version