இலங்கைசெய்திகள்

கைதடி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா!

Share
kaithady elders home1
Share

கைதடி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா!

கைதடி முதியோர் இல்லத்தில் 38 முதியவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதடி அரசாங்க முதியோர் இல்லத்தில் முதியவர்கள் சிலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.

இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் 38 முதியவர்களும், 2 உத்தியோகத்தர்களும் தொற்றுக்குள்ளானமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 7 உத்தியோகத்தர்களுக்கும் இன்று தொற்று உறுதியானது.

தென்மராட்சி பிரதேசம் ஆபத்தான வலயமாக மாறி வரும் நிலையில், மக்கள் தடுப்பூசியை விரைவாக செலுத்திக்கொள்வதே தம்மையும், சமூகத்தையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழியென சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...