25 6840592626631
இலங்கைசெய்திகள்

கோவிட் அச்சுறுத்தல் : திரும்பப் பெறப்பட்ட அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கை

Share

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இன்று, மேல் மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமார வெளியிட்ட சுற்றறிக்கையே, திரும்பப் பெறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை தொடர்பில், சமூக ஊடகங்களில், தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த சுற்றறிக்கை மேல் மாகாண சபை கட்டிடத்தில் அமைந்துள்ள மேல் மாகாண அமைச்சுகள் மற்றும் துறைகளின் ஊழியர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்படவில்லை என்றும் தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....