8 18
இலங்கைசெய்திகள்

தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை பேராசிரியர் குறித்த சர்ச்சை: உயர்ஸ்தானிகர் விளக்கம்

Share

தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை பேராசிரியர் குறித்த சர்ச்சை: உயர்ஸ்தானிகர் விளக்கம்

சமூகவியலாளர் பேராசிரியர் சசங்க பெரேராவுக்கு எதிராக புதுடில்லியில் இயங்கும் தெற்காசிய பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ள விசாரணையின் உண்மை தன்மை தமக்கு தெரிந்திருக்கவில்லை என்று இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன (Kshenuka Senewiratne) தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமெரிக்க மொழியியலாளர் நோம் சோம்ஸ்கியின் (Noam Chomsky) படைப்பு ஒன்றில், காஸ்மீர் விடயத்தில் ஆளும் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை விமர்சிக்கும் விடயங்கள் அடங்கியிருந்தன.

எனினும் அதனை இலங்கையை சேர்ந்த பேராசிரியர் சசங்க பெரேரா மேற்பார்வையிட்டு ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இதனையடுத்தே அவர் மீது தெற்காசிய பல்கலைக்கழகம் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்தது.

இதன் காரணமாக பேராசிரியர் சசங்க பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினார்.

இதற்கிடையில், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன, தெற்காசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் அகர்வாலிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

எனினும் தற்போது தமது நிலைப்பாட்டில் இருந்து விலகியுள்ள அவர் குறித்த விடயம், இந்தியாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புடையது என்று தமக்கு தெரியாது என்றும், அது உரிய வகையில் தமக்கு கூறப்பட்டிருந்தால், இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தில் தலையிடாமல் இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் பெரேரா தமக்கு முன்வைத்த எழுத்து மற்றும் வாய்மொழித் தொடர்பாடல்களில், அமெரிக்க மொழியியலாளர் இந்திய பிரதமரை விமர்சித்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேநேரம் தாம் அவருக்காக பிரதிநிதித்துவத்தை வழங்கியபோது இது குறித்து பல்கலைக்கழகமும் தமக்கு உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை என்று சேனுகா குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...