அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குறிகட்டுவானில் வைக்கப்பட்ட அரசமரத்தால் சர்ச்சை!

Share

கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள குறிகட்டுவான் துறைமுகத்தில் அரச மரக்கன்று ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அரச மரம் இருக்கும் இடமெங்கும் புத்தர் வந்து குடியேறுவதால், வருங்காலத்தில் இங்கும் ஒரு புத்தர் சிலை வைப்பதற்கான முன்னேற்பாடாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழரின் நிலங்களை திட்டமிட்டு பிடுங்குவதற்கு புத்தரை துணைக்கு எடுத்திருக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது.

காரணம், நயினாதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இறங்கு துறையாக குறிகட்டுவான் விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது சிங்கள சுற்றுலாப் பயணிகளும் இந்தத் துறைமுகம் ஊடாகவே பயணிக்கின்றனர்

இதனால் குறித்த நுழைவாயில் பகுதியில் அரச மரம் ஒன்றை வைத்து உருவாக்கி விட்டு காலப்போக்கில் அங்கே ஒரு புத்தர் சிலையை வைத்து வழிபாடு ஏற்பாடுகள் செய்யவதன் மூலம் சிங்கள மக்கள் மனதில் இவை பௌத்த பூமி என்ற மாய தோற்றத்தை உருவாக்கவே அரசு முயற்சி செய்கின்றது.

தற்போது தமிழர் தாயகத்தில் இந்து ஆலயங்களை அழித்து புத்தர் சிலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறிகட்டுவான் துறைமுகத்துக்கான நுழைவாயிலில் இந்த அரச மரம் வைக்கப்பட்டுள்ளமையும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நயினாதீவிலுள்ள விகாராதிபதி தனியார் படகுச் சேவையை நடத்தி வருகின்றார். அவரது படகுக்கான விற்பனைச்சீட்டில் நயினாதீவின் பெயர் இல்லாமலாக்கப்பட்டு நாகதீபம் என்று அச்சிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...