24 663000b71a560
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் குறித்து விசாரணை

Share

ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் குறித்து விசாரணை

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முனைகளில் பணியாற்றும் முன்னாள் இராணுவத்தினர் தொடர்பாக தொடர்ச்சியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலையில் உக்ரைன் போர் முனையில் 60 பேரளவான முன்னாள் இராணுவத்தினரும், ரஷ்யப் போர் முனையில் 100 பேர் அளவிலான முன்னாள் இராணுவத்தினரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

உக்ரைன் போர் முனையில் பணியாற்றும் இலங்கை இராணுவ சிப்பாய்களில் 15 பேர் உரிய முறையில் விடுப்பு அல்லது விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காது இராணுவத்தில் இருந்து தப்பியோடியே தற்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தின் பொதுமன்னிப்பின் கீழ் தற்போது அவர்கள் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ​போர்முனைகளில் பணியாற்றும் இராணுவத்தினர் குறித்த விபரங்கள், அவர்களின் தொடர்பு விபரங்கள், தற்போதைய நிலைமை என்பன தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் விபரங்களை சேகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...

world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு நாளை வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்திற்கு நாளை (ஏப்ரல் 09, 2026)...

world 39
செய்திகள்உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% அபராத வரி: உலக நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும்...

world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு விளையாட்டுகள்: சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியீடு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் போது...