நடுக்கடலில் சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து!

25 6846e222c6b87

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை நோக்கி பயணித்த கொள்கலன் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்தானது இன்று(9) காலை கேரளா கடற்கரைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கப்பலில் 22 பேர் பயணித்துள்ளதாகவும் அதில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வெடிப்பு சம்பவத்தினால் இலங்கை கடற்பிராந்தியத்திற்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version