17 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்

Share

இலங்கையில் குழப்பத்தில் உள்ள வாக்காளர்கள்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்தநிலையி;ல் கருத்துக் கணிப்பை நடத்தி இந்தியாவில் நரேந்திர மோடியின் வெற்றியை முன்னறிவித்த சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, இலங்கையில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்தும் விரிவான மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அமெரிக்கர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம இலங்கையில் (Sri Lanka) சுமார் 9.3 மில்லியன் பேரின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்து அவர்களின் கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், சமூக ஊடக போக்குகளை ஆய்வு செய்து, மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொடர்பிலான சதவீத மாற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் அண்மைய அறிக்கையில், மூன்று வேட்பாளர்களும் 25 சதவீதத்தை கூட எட்டவில்லை என்று கணித்துள்ளது.

விக்ரமசிங்க, அனுரகுமார மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும் சராசரியாக 21 மற்றும் 22 வீத வாக்குகளை பேணி வருகின்றனர்

எனினும் தீர்மானிக்கப்படாத வாக்காளர்கள் 35 வீதத்திற்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளனர்.அவர்களே இறுதி முடிவுக்கு உரித்துடையவர்களாக இருப்பார்கள்.

இதே நிறுவனம் இந்தியத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை சரியாகக் கணித்துள்ளது,மோடி மகத்தான வெற்றியின் மூலம் ஆட்சிக்கு வர மாட்டார் என்று கூறியிருந்தது.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...