24 660a1ed86c73c
இலங்கைசெய்திகள்

அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

Share

அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

சில பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சுமார் 30 அரச பேருந்து நடத்துனர்கள் ஒரு வார காலத்திற்கு பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அடிக்கடி 30, 50 ரூபாய் கொடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு சில நடத்துனர்கள் பயண சீட்டு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

பேருந்துகளில் சீரற்ற நடமாடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது சில அரச பேருந்து டிப்போக்களின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து மூன்று இலட்சம் ரூபாவாக உயர்வதாகவும் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 107 அரச டிப்போக்கள் உள்ளதாகவும், மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள டிப்போக்களில் பணிபுரியும் சில ஊழியர்களே இந்த மோசடியை பெரும்பாலும் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பயணம் தொடர்பான பணத்தை கொடுத்து நடத்துனரிடம் தவறாமல் பயணசீட்டை கேட்க வேண்டும் என்றும், அரச பேருந்துகளில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...