24 660a1ed86c73c
இலங்கைசெய்திகள்

அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

Share

அரச பேருந்தில் மோசடி: நடத்துனர்கள் பணி இடைநிறுத்தம்

சில பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சுமார் 30 அரச பேருந்து நடத்துனர்கள் ஒரு வார காலத்திற்கு பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அடிக்கடி 30, 50 ரூபாய் கொடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு சில நடத்துனர்கள் பயண சீட்டு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

பேருந்துகளில் சீரற்ற நடமாடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது சில அரச பேருந்து டிப்போக்களின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து மூன்று இலட்சம் ரூபாவாக உயர்வதாகவும் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 107 அரச டிப்போக்கள் உள்ளதாகவும், மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள டிப்போக்களில் பணிபுரியும் சில ஊழியர்களே இந்த மோசடியை பெரும்பாலும் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பயணம் தொடர்பான பணத்தை கொடுத்து நடத்துனரிடம் தவறாமல் பயணசீட்டை கேட்க வேண்டும் என்றும், அரச பேருந்துகளில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...