6 2
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

Share

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமையை ஒரு கட்சி என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை உள்ளது எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) கேள்வியெழுப்பியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமூக ஊடக ஆர்வலர்களை கைது செய்தது தவறாக நடந்துள்ளது. ஒரு நாடாக நாம் இன்று ஜனநாயகம் தொடர்பில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில்(sri lanka) இருந்து உகாண்டாவுக்கு(uganda) ராஜபக்ச குடும்பம்(rajapaksa family) பணம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பி, மக்களின் மனதை சிதைத்து, மக்கள் உள்ளங்களில் வெறுப்பை விதைத்தனர்.

ஒரு அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினரை வீதியில் அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறுப்பை விதைத்து, 75 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் அளவுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை ஏற்படுத்திய ஜனதா விமுக்தி பெரமுன(jvp) இப்போது சமூக ஊடக ஆர்வலர்களை அடக்குகிறது.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை கட்சி ரீதியாக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சமூக ஊடக ஆர்வலர்களின் கைது முற்றிலும் தவறான முறையில் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்காக இப்படிச் செய்ததற்காக  இலங்கை காவல்துறை வெட்கப்பட வேண்டும்.

இந்த சமூக ஊடக ஆர்வலர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்த ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் உரிமை என்ன என்பதை அவர்கள் மனசாட்சியுடன் கேட்க வேண்டும். மேலும் இது மிகவும் சோகமான மற்றும் தவறான நிலை என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...