26
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Share

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் காலநிலை அனர்த்தங்களால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம் உரிய முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக சுமார் 338,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை இழப்பீடாக வழங்கப்படும் என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) நேற்று முன்தினம் (29) அறிவித்தார்.

எனினும், குறித்த இழப்பீட்டுத் தொகை தமக்கு போதுமானதாக அமையாது என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் தங்களது பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் அதற்காக அரசாங்கம் உரிய வகையில் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...