25 684a68958fe92
இலங்கைசெய்திகள்

மாணவிகள் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக முறைப்பாடு

Share

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிருஸ்ணகிரி மாவட்ட சிறுவர்கள் நல குழுவிடம் விஜய் மீது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சியின் நிர்வாகி இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.

அண்மையில் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ – மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இதன்போது, விஜய் மாணவிகளுடன் நடந்து கொண்ட விதத்தை ஏற்கனவே, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். அத்துடன் அவர்களின் பெற்றோரையும் அவர் கடுமையாக கண்டித்திருந்தார்.

இதற்கு எதிராக ஏற்கனவே வேல்முருகன் மீது முறையிடப்பட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே, கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டத்தரணிகள் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஸ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டுள்ளார்.

இந்த செயல் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை தொடுவது தவறில்லை என்கிற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...