25 684a68958fe92
இலங்கைசெய்திகள்

மாணவிகள் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக முறைப்பாடு

Share

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிருஸ்ணகிரி மாவட்ட சிறுவர்கள் நல குழுவிடம் விஜய் மீது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சியின் நிர்வாகி இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.

அண்மையில் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ – மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இதன்போது, விஜய் மாணவிகளுடன் நடந்து கொண்ட விதத்தை ஏற்கனவே, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார். அத்துடன் அவர்களின் பெற்றோரையும் அவர் கடுமையாக கண்டித்திருந்தார்.

இதற்கு எதிராக ஏற்கனவே வேல்முருகன் மீது முறையிடப்பட்டுள்ள நிலையில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே, கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் விஜய் ஈடுபட்டார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டத்தரணிகள் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி கிருஸ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டுள்ளார்.

இந்த செயல் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை தொடுவது தவறில்லை என்கிற தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...