tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு மில்லியன் ரூபா இழப்பீடு

Share

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை – வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 4.2 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உபுல் சமிந்த என்ற அதிகாரியின் குடும்பத்துக்கே இவ்வாறு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையில் ஜனாதிபதி செயலகம் 2.5 மில்லியன் ரூபாயையும், இலங்கை பொலிஸ் திணைக்களம் 1.7 மில்லியன் ரூபாயையும் வழங்கியுள்ளன.

வெலிகம விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய சோதனையின் போதே உபுல் சமிந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

இவ்வாறு கடமையாற்றிய நிலையில் உயிரைத் தியாகம் செய்த பொலிஸ் அதிகாரியின் இழப்பிற்காக அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...