tamilni 431 scaled
இலங்கைசெய்திகள்

பட்டத்து இளவரசியைக் காதலிக்கும் சாதாரண குடிமகன்

Share

பட்டத்து இளவரசியைக் காதலிக்கும் சாதாரண குடிமகன்

பிரித்தானியரான ஒரு சாதாரண குடிமகன் பெல்ஜியம் நாட்டு பட்டத்து இளவரசியை, அதாவது, வருங்கால மகாராணியைக் காதலிக்கிறாராம்.

இங்கிலாந்திலுள்ள Rochdale என்னுமிடத்தைச் சேர்ந்தவர் நிக் (Nick Dodd, 20). நிக் ஆக்ஸ்போர்டு பல்கலையில் வரலாறு படிக்கிறாராம். அவருடன், பெல்ஜியம் நாட்டின் பட்டத்து இளவரசியான எலிசபெத்தும் (22) படிக்கிறார்.

படிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக பெல்ஜியம் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிக் தனது நான்காவது வயதிலேயே தன் தந்தையான ஆண்ட்ரூவை (44) இழந்தவர். அதுமுதல், தன் தாயுடன்தான் அவர் வாழ்ந்துவருகிறார்.

இளவரசி எலிசபெத், பெல்ஜியம் மன்னரான பிலிப், ராணி மத்தில்டா தம்பதியின் மூத்த மகள் ஆவார்.

மன்னருக்குப்பின் இளவரசி எலிசபெத்தான் பெல்ஜியம் நாட்டுக்கு ராணியாக ஆவார். ஆக, நிக் எலிசபெத்தை திருமணம் செய்துகொள்வாரானால், ஊடகங்கள் எழுதியதுபோலவே, ஒரு சாதாரண குடிமகன், வருங்கால மகாராணியின் கணவராகிவிடுவார்.

பட்டத்து இளவரசியைக் காதலிக்கும் சாதாரண குடிமகன் என பெல்ஜியம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், அவர் வசதியான பரம்பரையில் வந்தவர்தான் என்றும், அவர் இளவரசி எலிசபெத்துக்கு நல்ல ஜோடி என்றும், அவர் ஒரு நல்ல கணவராக இருப்பார் என்றும் நிக்குக்கு புகழாரமும் சூடியுள்ளன.

 

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...