24 6646f749948ca
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Share

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாளை(18) கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, நாளை காலை வெள்ளவத்தை(Wellawatte) தொடருந்து நிலையத்துக்கு அருகில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பால், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர யுத்தம் நிறைவடைந்து நாளை தினம் 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளன.

இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாளைய தினம் நினைவுகூரவுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் நினைவேந்தல்களுக்கு ஆதரவாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, வெள்ளவத்தை தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு, வெள்ளை மலர்களுடன் வருமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா புத்தர் சிலைக்கு அருகாமையில் இன்று(17) மாலை ஆறு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...