tamilni 262 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள்

Share

சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள்

சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டில் அரசாங்கத்தின் இடத்தை சிங்கள, தமிழ், கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் மக்கள் யாராக இருந்தாலும் அரச இடத்தை கைப்பற்றவோ சட்டவிரோதமாக பிடிக்க முயற்சித்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது ஒரே விதமாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் தற்போது பிரச்சாரம் செய்கிறார்கள், நாங்கள் சிங்களவர்கள் எங்களை எங்களுடைய இடத்திலிருந்து வெளியே போகச் சொல்கிறார்கள் என்று. அது முற்றிலும் தவறான விடயமாகும்.

தனியார் இடங்களாக இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் அதில் தலையிடப் போவதில்லை. எனினும் அரசாங்க இடத்திற்குள் யார் நுழைந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதங்களை காட்டி இதனை பிரச்சினைப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது நாகரீகமான செயல் கிடையாது என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
549229
செய்திகள்இலங்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனையில் நாளை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!

இலங்கையின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சி...

delivery20
செய்திகள்இந்தியா

டெல்லியில் பயங்கரம்: உணவு டெலிவரி ஊழியர்கள் ஹெல்மெட்டாலேயே தாக்கி தொழிலதிபர் கொலை!

நாட்டின் தலைநகரான டெல்லியில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுடனான மோதலில் படுகாயமடைந்த தொழிலதிபர் ஒருவர் சிகிச்சை...

862
உலகம்செய்திகள்

4 கி.மீ நீந்தித் தாயையும் உடன்பிறப்புகளையும் மீட்ட 13 வயதுச் சிறுவன்: மேற்கு அவுஸ்திரேலியாவில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடாவில் (Geographe Bay), சீற்றமான கடல் அலைகளுக்கு மத்தியில் சுமார் 4...

New Project 138
செய்திகள்இலங்கை

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நீதிமன்ற அழைப்பாணை ரத்து: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலைகள் தொடர்பாக,...