tamilni 358 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

Share

கொழும்பு துறைமுகத்தில் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 74 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான உணவுப் பொருட்களை உள்ளடக்கிய 115 கொள்கலன்களை விடுவிக்க இரண்டு வருடகால அவகாசம் சென்றுள்ளது.

இதனால் பொருட்களை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களம், சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தினால் பொருட்களை வெளியிடுவதற்கு வழங்கப்பட வேண்டிய அறிக்கைகள் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்கள் அடங்கிய 27 கொள்கலன்களை வெளியிட 563 நாட்களும், மற்ற 27 உணவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலன்களை வெளியிட சுமார் இரண்டு வருடங்களும் சென்றுள்ளன.

இந்த உணவு கொள்கலன்கள் தொடர்பாக, இலங்கை சுங்கம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இதேவேளை, 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 624,877 கிலோ மஞ்சள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்மையினால் தேவையான சட்ட நடைமுறைகள் இன்றி இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மஞ்சள் 2020ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...