இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

tamilni 358 scaled
Share

கொழும்பு துறைமுகத்தில் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 74 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான உணவுப் பொருட்களை உள்ளடக்கிய 115 கொள்கலன்களை விடுவிக்க இரண்டு வருடகால அவகாசம் சென்றுள்ளது.

இதனால் பொருட்களை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களம், சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தினால் பொருட்களை வெளியிடுவதற்கு வழங்கப்பட வேண்டிய அறிக்கைகள் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்கள் அடங்கிய 27 கொள்கலன்களை வெளியிட 563 நாட்களும், மற்ற 27 உணவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலன்களை வெளியிட சுமார் இரண்டு வருடங்களும் சென்றுள்ளன.

இந்த உணவு கொள்கலன்கள் தொடர்பாக, இலங்கை சுங்கம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இதேவேளை, 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 624,877 கிலோ மஞ்சள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்மையினால் தேவையான சட்ட நடைமுறைகள் இன்றி இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மஞ்சள் 2020ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....