8 30
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் தவிக்கும் மக்கள்

Share

கொழும்பில் பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் தவிக்கும் மக்கள்

கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்தவர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டவர்களின் பிரேத பரிசோதனைகள் பிற்பகல் 3.00 மணி வரை மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலர் வாடகை அடிப்படையில் வாகனங்களுடன் வைத்தியசாலைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும், மரண விசாரணை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனைகள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதுடன் பிரேத பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட பிரேத பரிசோதனை பதிவுகள் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணி வரை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...