கொழும்பில் CCTV கண்காணிப்பில் சிக்கிய சாரதிகள்

tamilnig 16

கொழும்பில் CCTV கண்காணிப்பில் சிக்கிய சாரதிகள்

கொழும்பை சுற்றியுள்ள வீதிகள் நேற்று CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு,125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

CCTV கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பை சுற்றியுள்ள CCTV மூலம் அவதானிக்கப்பட்டுள்ள 125 போக்குவரத்து விதி மீறல்கள் இனங்காணப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இனங்காணப்பட்ட பிழைகளில் பிரதானமாக பாதையை மாற்றியமை மற்றும் நிறுத்தல் கோடுகளில் நிற்காமல் வாகனம் ஓட்டுதல் போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version