இலங்கைசெய்திகள்

நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share
2 49
Share

இலங்கையின் (Srilanka) சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எல்லா உணவுப் பொருட்களுக்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

சில இடங்களில் அதிகூடிய விலைக்கு வாங்குவதற்குத் தேங்காய்கள் இல்லை.

எனவே இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை உப்புத் தொழிற்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து (India) இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் அடங்கிய முதலாவது தொகுதி உப்பு நேற்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த கால ஆட்சியாளர்களே நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடுக்கு காரணம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் நெல்லினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...