24 66063ebaca9d1
இலங்கைசெய்திகள்

கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன்

Share

கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன்

இலங்கையில் 2024 பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நேற்று (28.3.2024) தென்னை அபிவிருத்தி அதிகாரசபை (சி.டி.ஏ) வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 4,366 மெட்ரிக் தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூ. 2,401 மில்லியன் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மாதாந்த அடிப்படையில் வெளியிட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின்படி, 2024 பெப்ரவரியில் 6,739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் ரூ. 2,971 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டை விட 2024 பெப்ரவரியில் 2,373 மெட்ரிக் தொன்கள் அதிகரித்ததுடன், ஏற்றுமதி வருமானமும் ரூ. 570 மில்லியன் ஆக கூடியுள்ளது.

கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை ஒவ்வொரு மாதமும் தேங்காய் உற்பத்தி அதிகளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.

இலங்கையில் தேங்காய் உற்பத்தி 2023 நவம்பரில் 22 சதவீதமும், டிசம்பரில் 5 சதவீதமும், 2024 ஜனவரியில் 18 சதவீதமும், பெப்ரவரியில் 25 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், தேங்காய்களின் மொத்த உற்பத்தி 3,000 மில்லியனைத் தாண்டும், மேலும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 1,380 மில்லியனாக இருக்கும்.

எவ்வாறாயினும், தேங்காய் ஏற்றுமதியின் வருமானம் இந்த வருடத்தில் முதன்முறையாக ஒரு பில்லியன் டொலர்களாக உயரும் என தென்னை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...