8 3
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின

Share

கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின

அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரியில் இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் 03 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் விவரம் கீழே,
01- பெயர் – தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்கா தேசிய அடையாள எண் – 951350753V

02- பெயர் – பதி ஹரம்பேஜ் அஜித் ரோஹன அல்லது சண்டி

தேசிய அடையாள அட்டை எண் – 199207801772

முகவரி – இல. 655/A மகும்புர, அஹுங்கல்ல

03- பெயர் – முத்துவடுர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது ஜெனி

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

குற்றப்பிரிவு மேல் மாகாண தெற்கு – 072-4222223 நிலைய அதிகாரி, அதுரிகிரிய பொலிஸ் நிலையம் – 071-8591657 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...