18 11
இலங்கை

ஒரு மாதத்தின் பின்னர் கணவரின் மரணத்தை அறிந்து கொண்ட கிளப் வசந்தவின் மனைவி! உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்

Share

ஒரு மாதத்தின் பின்னர் கணவரின் மரணத்தை அறிந்து கொண்ட கிளப் வசந்தவின் மனைவி! உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல்

அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பிரபல வர்த்தகரான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையைில், தீவிர சிகிச்சைப பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மெனிக் விஜேவர்தன தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், கிளப் வசந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விடயம் நேற்றையதினம் தான் அவருடைய மனைவி மெனிக் விஜேவர்தனவுக்கு தெரியவந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதனால் அவர் கடும் மன வேதனையிலும், மன உளைச்சலிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்கு சென்றிருந்த போது கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அவருடன் சேர்த்து மற்றுமொரு நபரும் உயிரிழந்தார்.

மேலும், கிளப் வசந்தவின் மனைவியும், பிரபல பாடகி கே.சுஜீவா உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிளப் வசந்தவின் மனைவி அனுமதிக்கப்பட்டு மூன்று சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு, அவரது மார்பில் இருந்த தோட்டாக்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

Share
தொடர்புடையது
coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...

MediaFile 3 5
இலங்கைசெய்திகள்

வீதிகள், பாலங்கள், மின்சாரம், நீர் வழங்கல் ஆகியவற்றுக்கு ரூ. 100 பில்லியனுக்கும் அதிகமான நட்டம்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் நிதி இழப்புகள்...

PARLIAMENT NEW 728086
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றம்: டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களிலும் கூட்டத் தீர்மானம்!

இந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி (புதன்கிழமை) மற்றும் 19ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆகிய இரு...