12 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

Share

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் தனியார் மலர்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கிளப் வசந்தாவின் இரண்டாவது மகன் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்நாட்டிற்கு வரும் வரையில் சடலத்தை மலர்சாலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அதுருகிரியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கிளப் வசந்த என்ற தொழிலதிபர், அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் பச்சைகுத்தும் நிலைய உரிமையாளர் துலான் சஞ்சுலாவும் ஒருவராகும். குறித்த ஏழு பேரும் நேற்றிரவு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நயனா வசுலாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் தலாஹேன பொது மயானத்தில் இடம்பெற்றன.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...