12 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

Share

கொழும்பில் கொலை செய்யப்பட்ட வசந்த – வெளிநாட்டு நபருக்காக காத்திருக்கும் சடலம்

அத்துருகிரியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் தனியார் மலர்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த கிளப் வசந்தாவின் இரண்டாவது மகன் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்நாட்டிற்கு வரும் வரையில் சடலத்தை மலர்சாலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அதுருகிரியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கிளப் வசந்த என்ற தொழிலதிபர், அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் பச்சைகுத்தும் நிலைய உரிமையாளர் துலான் சஞ்சுலாவும் ஒருவராகும். குறித்த ஏழு பேரும் நேற்றிரவு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நயனா வசுலாவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் தலாஹேன பொது மயானத்தில் இடம்பெற்றன.

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...