12 4
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த கொலை: இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேகநபர்

Share

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான லொக்கு பெட்டி {Loku Pety}’ எனப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று (04) காலை 7:43 மணியளவில் டுபாயில் இருந்து விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்கு சென்ற சுரேந்திர வசந்த பெரேரா எனும் கிளப் வசந்த என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லொக்கு பெட்டி கொலை செய்ய திட்டம் தீட்டி பணம் கொடுத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு மாகாண குற்றப் பிரிவின் தெற்குப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைப்பார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...